Thursday, February 19, 2015

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

கடல் தாண்டிய பறவை

ISBN 978-93-83188-16-1
கவிதைத் தொகுப்பு

96 பக்கங்கள்
விலை ரூ. 75 /-





"சிங்கப்பூரில் பணிநிமித்தமாய் வாழ நேர்ந்தாலும் தன் தமிழ்த்தாகத்தைத் தொலைக்க விரும்பாத வளரும் இளங்கவிஞர்களுள் ஒருவரான திரு பா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக வெளியாகிறது இந்த கடல் தாண்டிய பறவை.

கனமான கவிபுனையும் ஆற்றலும், எளிமையான வார்த்தைச் சொல்லாடல்களும் சிறப்பியல்புகளாகக் கொண்டுள்ள இக்கவிஞரின் கடல் தாண்டிய பறவையை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பதில் பெருமையடைகிறோம்."

- வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்...

"உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை. அந்த உணர்வுகள் நற்சிந்தனைகளுக்குப் பிறகு பிறக்கவேண்டும். பிறர் சிந்திக்காததைச் சிந்திப்பவன் தனித்து நிற்கும் கவிஞனாகிறான். அந்த வகையில் கவிஞர் மீனாட்சி சுந்தரத்தின் சிந்தனை வேறுபட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். நிலைவைத்தான் எல்லோரும் தேடுவார்கள். இவர் கவிதையில், நிலவு சோறூட்டியவரைத் தேடுகிறது.

சிறந்த கவிஞன் உவமையில் நிற்பான். நூல் முழுதும் பரவலாக உவமைகளை கவிஞர் அள்ளிக்கொட்டியிருக்கிறார்"

- புதுமைத்தேனீ மா. அன்பழகன்
சிங்கப்பூர்
அணிந்துரையில்...

"உன் கவிதைகளை வாசிக்கும்போது நான் நீயாக முடிகிறது. ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை."

- ராஜூமுருகன்
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்
வாழ்த்துரையில்...

"கவிதை என்ற பெயரில் வார்த்தைக் கபடி ஆடாமல் எளிமையான சொல்லாடல்களால் மனதை வருடிச் செல்கிறார் இந்த இளைய கவி, படிக்கப் படிக்க என் மனவளைக்குள் சுக நண்டூருகிறது நண்பா!

பெரும்பாலும் அனுபவ வார்த்தைகளே அலங்காரம் இல்லாமல் பொலிவுடன் ஈண்டு கவிதைகளாக இங்கு பவனித்துள்ளன. தமிழ் கவிதைத் தளத்தில் புதிய வரவு என் நண்பன் என்பதை நினைக்கும் இந்த நொடி உண்மையில் அத்தகைய மகிழ்ச்சியானது!"

- ஆர்.சரண்
உதவிபொறுப்பாசிரியர்
விகடன் குழுமம்.
வாழ்த்துரையில்...

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
167, .வி.ஆர். காம்ப்ளக்ஸ்
அரசு கலைக்கல்லூரி எதிரில்
செரி ரோடு
சேலம் - 636007.
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com