Saturday, February 6, 2010


மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் 2009.ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான ‍பரிசு பெற்ற நூல்...

புதுச்சேரி மூவொரு கடவுள் அறக்கட்டளையின் 2009.ஆம் ஆண்டிற்கான சிறந்த கட்டுரை நூலுக்கான ‍"ஞானராஜா மகிமைசெல்வி இலக்கிய விருது" பெற்ற நூல்...


"கல்விச்செல்வம்" ஏடுகளின் புள்ளி விவரங்களையும் சிந்திக்க வைக்கும் சுவாரசியமான செய்திகளையும் கொண்டு கல்விச் செல்வம், வண்ணத்துப்பூச்சிகளுக்கு வழி விடுவோம், வாழ்ந்து பார்க்கலாம் வா போன்ற மூன்று கட்டுரைகளை உள்ளடக்கிய சிறப்பான கையடக்க நூலாக திகழ்கிறது.

பக்கங்கள் 40
விலை ரூ. 8 /-

-கவிஞர் சூர்யநிலா


"பயணவழிப் பூக்கள்" கவிஞர் ஏகலைவனின் முதல் நூல் என்றாலும் நிறைவு தருவதாக உள்ளது, உண்மையின் உணர்வு என்று வாழ்த்துச் சொன்ன எழுத்தாளர் லேனா தமிழ்வாணனும், அணிந்துரை அளித்துள்ள கவிஞர் பழநிபாரதியும், விமர்சனம் தந்துள்ள இலக்கிய ஞானி வல்லிக் கண்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மை தான். முத்தான கவிதைகள்.

பக்கங்கள் 64
விலை ரூ. 20 /-

- நகரத்தார் மலர் இதழ்-ஆகஸ்ட் 2004