Friday, August 16, 2013


WATER MANAGEMENT
Historical perspective and development

EDITOR
S. ANBAZHAGAN

ISBN – 978 – 93 – 83188 – 01 – 7

Price – Rs. 300

Water is one of the basic requirements for the mankind for his survival. Water on the Earth is available in various forms including sea water, ice, lakes, river and groundwater. Sea water occupies in major percentages on the earth, however it is not directly useful for men in day to day life. Similarly, the large quantity of fresh water available in the polar region in the form of ice which is also not readily available. The surface and groundwater are the main source of water being utilized for cultivation, drinking water and domestic purposes. The surface reservoirs and groundwater aquifers are being receiving water through rainfall. In Indian subcontinent, agriculture activities are the prime source of livelihood for the majority of the population. If monsoon fails, there will be scarcity of water for irrigation as well as domestic need. This has lead to prevailing of frequent drought condition in many parts of the country. The conjunctive use of surface and groundwater may solve this problem to some extent. However, a full proof of water management practices is yet to be adopted in this country. The year old traditional water management practices are gradually vanishing. The surface water reservoirs like lakes, ponds, small streams were eliminated due to fast growing urbanization and industrial development. In this context, it is necessary to review the historical method of water management practices, particularly in South India. In addition, the recent developments in water development need to be addressed. In this regard, a Regional Workshop on “Artificial Recharge and Watershed Management” was conducted at Periyar University through UGC sponsored project. Geologists, groundwater engineers, NGO’s, academic professionals, scholars and students were attended the meeting. The purpose of the Regional Workshop was to explore the ideas and methods of historical and recent trends of water management practices. The research articles presented in the Workshop are published as proceeding in this book. The book comprises of seven articles on various subjects include Irrigation and water management techniques in the history of Tamil Nadu and in India, irrigation management and economic transformation, ground water development and management, sustainable agriculture practices, GIS technique in artificial recharge studies and water level fluctuation study. The collective information available in this book will be useful for the field level scientists, academicians and students.

S.ANBAZHAGAN
(In the Preface of the book)
For Books

VASAGAN PUBLICATIONS
11/96 Sangili Aasari Nagar
Sanniyasigundu
Salem – 636015
Mobile - 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com
www.facebook.com/vasaganpathippagam





நன்றி - திரு. புதுவை பழனி மற்றும் புதுவை பாரதி இதழ்



Wednesday, August 14, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

இதெல்லாம் ஒரு புத்தகமா.!

கவிதைத் தொகுப்பு

கவிஞர் சி. தணிஜோ

ISBN 978-81-924351-8-3

96 பக்கங்கள்
விலை ரூ. 70 / -




ஒரு மனிதனின் இளமைப்பருவம் என்பது இரத்தத்தில் வேகத்தையும், புத்தியில் ஆர்வத்தையும் ஒரு சேரக் கொண்டமைந்தது.

அந்தப் பருவத்தில் செய்யும் செயல்கள் எல்லாமே சரியானதாகவே தோன்றும். அந்த எண்ணத்தின் விளைவால் மனசுக்குள் தோன்றும் நம்பிக்கை, தைரியம் போன்றவை எல்லாம் அனுபவம் கொடுக்கத் தவறும் விஷயங்கள் எனலாம்.

வாலிப வயதுக்கேயுரிய இளமைத் துள்ளலோடும் சிறிதளவிலான மொழி கலப்போடும், எண்ணத்தை பதிவாக்கும் ஆர்வத்தோடும் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மழையாய் நம்மை நனைக்கையில், சிறு தூறலில் நனைந்து சுகப்படும் மழலை போல சிலிர்க்கிறது மனசு. ஆனால், அதுவே அடர்த்தியான மழையாய் பெய்தால் மகிழ்வோமா? என்ற கேள்வி சிந்தினைக்குரியது.

எனினும், No Magic, No Logic  என்று சொல்வதைப்போல சில விஷயங்கள் ரசிக்க மட்டுமேயானவை என்ற அடிப்படையில் சிந்திப்பதை ஓரம் வைத்துவிட்டு இந்த நூலில் இடம் பெற்றுள்ள சின்னச் சின்ன ரசனைகளை நாமும் ரசிப்போம்.

-    வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்
நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

Friday, August 2, 2013

சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள்

கவிஞர் இரா.இரவி விமர்சனம்


'குழந்தைகளைத் தேடும் கடவுள்'
நூல் ஆசிரியர்                                கவிஞர் ச .கோபிநாத், 9790231240
நூல் விமர்சனம்                            கவிஞர் இரா .இரவி 
வெளியீடு                                          வாசகன் பதிப்பகம்
                                                               11/96 சங்கிலி ஆசாரி நகர்
                                                               சன்னியாசி குண்டு 
                                                                சேலம் .636015. செல் 9944391668.



உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று
 .
'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .

.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .

தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !

ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .

அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !

காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .

நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !

தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!

.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .

தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !

குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் . வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாதுகுழந்தைகள் மனசு .

சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !

நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை வீடு .

பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !

உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.

அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !

நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் . ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .

சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !

இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .

முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !

சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .







தெய்வீகம் புத்தகக் கண்காட்சியின் வாசகன் பதிப்பக அரங்கில் எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் & வாசகன் பதிப்பக வாசகர்கள்









தெய்வீகம் புத்தகக் கண்காட்சியின் வாசகன் பதிப்பக அரங்கில் எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் & வாசகன் பதிப்பக வாசகர்கள்








Thursday, August 1, 2013


நன்றி - கவிஓவியா மாத இதழ்



நன்றி - மாலை மலர்


நன்றி - கவிஞர், ஆய்வாளர் புதுவை. வ. பழனி


நன்றி -  தினத்தந்தி