Wednesday, August 14, 2013

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

இதெல்லாம் ஒரு புத்தகமா.!

கவிதைத் தொகுப்பு

கவிஞர் சி. தணிஜோ

ISBN 978-81-924351-8-3

96 பக்கங்கள்
விலை ரூ. 70 / -




ஒரு மனிதனின் இளமைப்பருவம் என்பது இரத்தத்தில் வேகத்தையும், புத்தியில் ஆர்வத்தையும் ஒரு சேரக் கொண்டமைந்தது.

அந்தப் பருவத்தில் செய்யும் செயல்கள் எல்லாமே சரியானதாகவே தோன்றும். அந்த எண்ணத்தின் விளைவால் மனசுக்குள் தோன்றும் நம்பிக்கை, தைரியம் போன்றவை எல்லாம் அனுபவம் கொடுக்கத் தவறும் விஷயங்கள் எனலாம்.

வாலிப வயதுக்கேயுரிய இளமைத் துள்ளலோடும் சிறிதளவிலான மொழி கலப்போடும், எண்ணத்தை பதிவாக்கும் ஆர்வத்தோடும் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மழையாய் நம்மை நனைக்கையில், சிறு தூறலில் நனைந்து சுகப்படும் மழலை போல சிலிர்க்கிறது மனசு. ஆனால், அதுவே அடர்த்தியான மழையாய் பெய்தால் மகிழ்வோமா? என்ற கேள்வி சிந்தினைக்குரியது.

எனினும், No Magic, No Logic  என்று சொல்வதைப்போல சில விஷயங்கள் ரசிக்க மட்டுமேயானவை என்ற அடிப்படையில் சிந்திப்பதை ஓரம் வைத்துவிட்டு இந்த நூலில் இடம் பெற்றுள்ள சின்னச் சின்ன ரசனைகளை நாமும் ரசிப்போம்.

-    வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்
நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment