Monday, January 5, 2015


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

மாடல்ல மற்றை யவை….

ISBN 978-93-83188-20-8
சிறுகதைத் தொகுப்பு
ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

80 பக்கங்கள்
விலை ரூ. 55 /-



“மாடல்ல மற்றை யவை... நூலிலுள்ள 16 சிறுகதைகளும் சமூகத்தை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளான. கதாபாத்திரங்களினூடாக வெளிப்படும் நூலாசிரியர் திரு. ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (எ)சுழல் சத்தியப்பிரியன் அவர்களின் சமூக அக்கறையை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் நல்லதொரு பணியை காரைக்குடி வள்ளுவர் பேரவையோடு இணைந்து ஏற்றதில் மகிழ்கிறது வாசகன் பதிப்பகம்.”

-    பதிப்புரையில்
வாசகன் பதிப்பகத்தார்

“நண்பர் ஸ்டீபனின் கதைகள் நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நெம்புகோல் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் எனும் சீரிய நெறியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கதைக்கும் நீதிசொல்ல விரும்பிய நல்ல எழுத்தாளர் என் நண்பர் ஸ்டீபன், பகவத்கீதை, திருக்குரான், விவிலியம் போன்றவற்றைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.”

-    மதிப்புரையில்
கலைவாணி மெ.செயம்கொண்டான்
தலைவர், வள்ளுவர் பேரவை
காரைக்குடி

“ஒரு பள்ளி ஆசிரியரின் சிறுகதைகளுக்கு அப்பள்ளி மாணவர்களே ஓவியம் வரைந்திருப்பது நான் கேள்விப்படாத புதுமை தான்.... ஒவ்வொரு சிறுகதைக்கும் பொருத்தமாக திருக்குறளையும், மும்மறை வாசகங்களையும் தெரிவு செய்து சிறுகதையின் நிறைவில் இடம் பெறச் செய்திருப்பது மிக அருமை.”

-    வாழ்த்துரையில்
அருட்பணி Y.S. யாகு சே.ச
தலைவர், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்
தலைமையாசிரியர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி
தேவகோட்டை.

“பதினாறு சிறுகதைகளும் பதினாறு முத்துகள், பதினாறு செல்வங்கள்... பாராட்டப்பட வேண்டிய சிறந்த கதைத் தெரிவுகள்.. மாணவர்களின் ஓவியங்கள் வியக்க வைக்கின்றன... மக்கள் பயனுற இதுபோன்ற நல்ல படைப்புகளை நிறைய படைத்திட நூலாசிரியருக்கு இதயங்கனிந்த வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக....”

-    அணிந்துரையில்
நீ. இளங்கோ
மாநிலப் பொதுச் செயலர்
தமிழகத் தமிழாசிரியர் கழகம்
.


நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com