Tuesday, July 22, 2014
Saturday, July 19, 2014
Saturday, July 12, 2014
நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
நெஞ்சுக்குள் நெருப்பு
ISBN
978-93-83188-08-6
கவிதைத் தொகுப்பு
கவிஞர் தங்கராஜீ
96 பக்கங்கள்
விலை ரூ. 60 /-
சமூகத்தின் மீதான
கோபம், கனன்று கொண்டிருக்கும் செந்தணலாக உருப்பெற்று, எல்லாம் மாறும் எனும் நம்பிக்கையை
கவிஞனின் இதயத்தில் ஏற்படுத்திம் அந்த நம்பிக்கையை தன்னைச் சுற்றியுள்ள மனித
மன்ங்களில் விதைக்க முற்படும். அத்தகு நல்லதொரு நம்பிக்கையை நம்முள்ளும்
விதைக்கிறது கவிஞர் க. தங்கராஜீ அவர்களின் நெஞ்சுக்குள் நெருப்பு.
-
வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்
கட்டிடக் கலைஞரான க. தங்கராஜீ ஒரு கவிதைக் கலைஞராக வலம்வரத்
தொடங்கியுள்ளார். என் மனச்சாரல் தொகுப்பினைத் தொடர்ந்து அவரின் கவிதை ஆர்வம்
அணையாமல் இருக்கிறது என்பதை நெஞ்சுக்குள் நெருப்பு சான்றாக உள்ளது.
-
கவிஞர் பொன்.குமார்
நூலின் அணிந்துரையில்...
தேர்ந்த கவிஞருக்குரிய விரிந்த பார்வை, தீர்வு
சொல்லும் விவேக சிந்தனை, தவழ்ந்து வரும் கங்கையென வற்றாத கற்பனை, திகட்டாத சுவை
சொட்டும் கவிதைத் தேனடை! செங்கல் அடுக்கிச் சுவர் செய்யும் கைகள் சொல்லடுக்கி
கவிதை செய்து சொக்க வைக்கின்றன.
ஆசிரியர் சி. மெய்யழகன்
நூலின் வாழ்த்துரையில்...
வாழ்தலின்
எதார்த்தத்தை உணர்த்தும் கவிதைகளோடு மலர்ந்திருக்கும் “நெஞ்சுக்குள் நெருப்பு”
கவிஞர் தங்கராஜ் அவர்களை சாதனை முகட்டில் ஏற்றி அழகு பார்க்கும். அரவணைக்கும்
அத்தனை இதயங்களும் இவரின் சாதனைகளில் அகம் மகிழும்.
-
கவிஞர் ச. கோபிநாத்
நூலின் வாழ்த்துரையில்...
சமூக அவலங்களை வேரறுக்க ஒரு கிராமத்து இளைஞனாய், கட்டிடக்
கலைஞனாய், சீர்திருத்தக் கவிஞனாய் கவிதைப் போர் தொடுத்துள்ளார் கவிஞர் க.
தங்கராஜீ.
-
ஆசிரியர் வெ. தங்கதுரை
நூலின் வாழ்த்துரையில்...
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96
சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச
9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
வல்லினம் நீ உச்சரித்தால்
ISBN
978-93-83188-08-6
கவிதைத் தொகுப்பு
கவிஞர் முகமது மதார்
64 பக்கங்கள்
விலை ரூ. 50 /-
இளம்தலைமுறைக்
கவிஞர்களின் வசந்தகாலம் இதுவெனத் தோன்றுகிறது. இந்த வசந்தகாலத்தில் வாலிபத்தில் தத்தம்
கனவுகளைச் சொல்லும் சந்தோஷங்கொண்ட இளைஞர்கள் பலரை தமிழ்க் கவியுலகம் சிவப்புக்
கம்பளமிட்டு வரவேற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வினிய காலக்கட்ட்த்தில் கவியுலகோடு
தன்னைப் பிணைத்துக் கொள்ள முன்வந்துள்ளார் இளங்கவிஞர் ஜனாப். முகமது மதார்
அவர்கள். இவரின் கவிதைகளில் திகட்டத்திகட்ட குடிகொண்டிருப்பது காதல்.... காதல்....
காதல்... காதலைத்தவிர வேறொன்றுமில்லை.
-
வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்
மதார் எளியமொழியில் தன் கவிதைகளைப் படைக்க விழைகிறார். மிக வெளிப்படையான வரிகளின் மூலமாக்க் கவிதைகளெங்கும்
நுட்பமான உணர்வுகளை நல்லதோர் கவிமாலையாகப் படைத்துக் காட்டுகிற எத்தனம் அவருடையது.
-
கவிஞர் ஆத்மார்த்தி
நூலின் அணிந்துரையில்...
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96
சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச
9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
Subscribe to:
Posts (Atom)