Sunday, February 5, 2012


வாசகன் பதிப்பகத்திற்கு "பதிப்பக ஒளிவிளக்கு" விருது
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து செயலாற்றி வரும் சேலம் வாசகன் பதிப்பகத்திற்கு கோவை வசந்தவாசல் கவிமன்றம் கடந்த 22.01.2012 அன்று "பதிப்பக ஒளிவிளக்கு" எனும் உயரிய விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. வாசகன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கும், பதிப்பாளர் திருமதி. வஹிதா பானு அவ‌ர்களுக்கும் தலைவர் கோவை கோகுலன் அவர்களின் முன்னிலையில் வசந்தவாசல் கவிமன்ற அங்கத்தினர்களான கவிச்சுடர் காசு குணசேகரன் அவர்களும் திருமதி.மல்லிகா காசு குணசேகரன் அவர்களும் விருதளித்து கெளரவித்தனர்.