Friday, May 10, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

இறைவன் தந்த பரிசு

ISBN 978-81-924351-7-6

கவிதைத் தொகுப்பு

ம. கதிர்வேல்

64 பக்கங்கள்
விலை ரூ. 35 / -

இளம் வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாகி வாழ்க்கைப் போராட்டங்களுக்குள் சிக்குண்டு இளமையைக் கடந்தாலும், காலம் கடந்து நிலைத்திருக்கும் கவிதைப் பூக்களால் மீண்டும் வசந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இறைவன் தந்த பரிசு கொண்டு வருகிறார் ம. கதிர்வேல்.

- பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்

“மாந்தர் மனக்கோட்டம் தீர்ப்பது நூல்” ஆனால் இந்தக் கவிஞர் மரக்கோட்டம் தீர்க்கும் நூலோடு மட்டுமே தொடர்புடையவர். வியப்பாயிருக்கிறது. இவருக்குள் உறைந்திருகும் கவிதா உணர்வுகளை இளமையிலேயே இனங்கண்டு ஊதிவிட யாரேனும் முன்வந்திருந்தால் தமிழுக்கு பெரும் வரவு கிட்டியிருக்கும்.

கற்பதற்கு காலம் இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை, என்றாலும் தனக்குத்தானே ஓயாது போராடி இவர் கவிஞராக வெளிப்பட்டு இருக்கிறார். எந்தவித மனக்கூச்சமும் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் இவர் தமிழ்செய்ய முற்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

செதுக்கிச் சீரமைக்க வாய்ப்பில்லாத போதும் இந்தக் கவிஞர் சிலையாக சுயம்புவாக உருவெடுத்திருக்கிறார். இவர் உண்மையிலேயே இறைவன் தந்த பரிசு தான்.

- ‘சொற்சுவை நம்பி’ கவிஞர் பே.செ. சுந்தரம்
ஆத்தூர்
நூலின் அணிந்துரையில்

ம. கதிர்வேல் எழுதிய “இறைவன் தந்த பரிசு” என்ற இந்த கவிதைப் பெட்டகம், தமிழுக்கும் தமிழை நேசிப்பவர்களுக்கும் கிடைத்த வரம். எளிய நடை, முக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தாழமிக்க வரிகள், இனிய சொற்கள் என்று அனைத்துத் தரப்பினரும் வாசித்து மகிழும் உன்னத படைப்பு.

- கொத்தாம்பாடி முருகேசன்
திரைப்பட இயக்குனர்
நூலின் அணிந்துரையில்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com