Thursday, February 19, 2015

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

கடல் தாண்டிய பறவை

ISBN 978-93-83188-16-1
கவிதைத் தொகுப்பு

96 பக்கங்கள்
விலை ரூ. 75 /-





"சிங்கப்பூரில் பணிநிமித்தமாய் வாழ நேர்ந்தாலும் தன் தமிழ்த்தாகத்தைத் தொலைக்க விரும்பாத வளரும் இளங்கவிஞர்களுள் ஒருவரான திரு பா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக வெளியாகிறது இந்த கடல் தாண்டிய பறவை.

கனமான கவிபுனையும் ஆற்றலும், எளிமையான வார்த்தைச் சொல்லாடல்களும் சிறப்பியல்புகளாகக் கொண்டுள்ள இக்கவிஞரின் கடல் தாண்டிய பறவையை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பதில் பெருமையடைகிறோம்."

- வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்...

"உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை. அந்த உணர்வுகள் நற்சிந்தனைகளுக்குப் பிறகு பிறக்கவேண்டும். பிறர் சிந்திக்காததைச் சிந்திப்பவன் தனித்து நிற்கும் கவிஞனாகிறான். அந்த வகையில் கவிஞர் மீனாட்சி சுந்தரத்தின் சிந்தனை வேறுபட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். நிலைவைத்தான் எல்லோரும் தேடுவார்கள். இவர் கவிதையில், நிலவு சோறூட்டியவரைத் தேடுகிறது.

சிறந்த கவிஞன் உவமையில் நிற்பான். நூல் முழுதும் பரவலாக உவமைகளை கவிஞர் அள்ளிக்கொட்டியிருக்கிறார்"

- புதுமைத்தேனீ மா. அன்பழகன்
சிங்கப்பூர்
அணிந்துரையில்...

"உன் கவிதைகளை வாசிக்கும்போது நான் நீயாக முடிகிறது. ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை."

- ராஜூமுருகன்
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்
வாழ்த்துரையில்...

"கவிதை என்ற பெயரில் வார்த்தைக் கபடி ஆடாமல் எளிமையான சொல்லாடல்களால் மனதை வருடிச் செல்கிறார் இந்த இளைய கவி, படிக்கப் படிக்க என் மனவளைக்குள் சுக நண்டூருகிறது நண்பா!

பெரும்பாலும் அனுபவ வார்த்தைகளே அலங்காரம் இல்லாமல் பொலிவுடன் ஈண்டு கவிதைகளாக இங்கு பவனித்துள்ளன. தமிழ் கவிதைத் தளத்தில் புதிய வரவு என் நண்பன் என்பதை நினைக்கும் இந்த நொடி உண்மையில் அத்தகைய மகிழ்ச்சியானது!"

- ஆர்.சரண்
உதவிபொறுப்பாசிரியர்
விகடன் குழுமம்.
வாழ்த்துரையில்...

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
167, .வி.ஆர். காம்ப்ளக்ஸ்
அரசு கலைக்கல்லூரி எதிரில்
செரி ரோடு
சேலம் - 636007.
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

Monday, January 5, 2015


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

மாடல்ல மற்றை யவை….

ISBN 978-93-83188-20-8
சிறுகதைத் தொகுப்பு
ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

80 பக்கங்கள்
விலை ரூ. 55 /-



“மாடல்ல மற்றை யவை... நூலிலுள்ள 16 சிறுகதைகளும் சமூகத்தை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளான. கதாபாத்திரங்களினூடாக வெளிப்படும் நூலாசிரியர் திரு. ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (எ)சுழல் சத்தியப்பிரியன் அவர்களின் சமூக அக்கறையை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் நல்லதொரு பணியை காரைக்குடி வள்ளுவர் பேரவையோடு இணைந்து ஏற்றதில் மகிழ்கிறது வாசகன் பதிப்பகம்.”

-    பதிப்புரையில்
வாசகன் பதிப்பகத்தார்

“நண்பர் ஸ்டீபனின் கதைகள் நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நெம்புகோல் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் எனும் சீரிய நெறியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கதைக்கும் நீதிசொல்ல விரும்பிய நல்ல எழுத்தாளர் என் நண்பர் ஸ்டீபன், பகவத்கீதை, திருக்குரான், விவிலியம் போன்றவற்றைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.”

-    மதிப்புரையில்
கலைவாணி மெ.செயம்கொண்டான்
தலைவர், வள்ளுவர் பேரவை
காரைக்குடி

“ஒரு பள்ளி ஆசிரியரின் சிறுகதைகளுக்கு அப்பள்ளி மாணவர்களே ஓவியம் வரைந்திருப்பது நான் கேள்விப்படாத புதுமை தான்.... ஒவ்வொரு சிறுகதைக்கும் பொருத்தமாக திருக்குறளையும், மும்மறை வாசகங்களையும் தெரிவு செய்து சிறுகதையின் நிறைவில் இடம் பெறச் செய்திருப்பது மிக அருமை.”

-    வாழ்த்துரையில்
அருட்பணி Y.S. யாகு சே.ச
தலைவர், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்
தலைமையாசிரியர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி
தேவகோட்டை.

“பதினாறு சிறுகதைகளும் பதினாறு முத்துகள், பதினாறு செல்வங்கள்... பாராட்டப்பட வேண்டிய சிறந்த கதைத் தெரிவுகள்.. மாணவர்களின் ஓவியங்கள் வியக்க வைக்கின்றன... மக்கள் பயனுற இதுபோன்ற நல்ல படைப்புகளை நிறைய படைத்திட நூலாசிரியருக்கு இதயங்கனிந்த வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக....”

-    அணிந்துரையில்
நீ. இளங்கோ
மாநிலப் பொதுச் செயலர்
தமிழகத் தமிழாசிரியர் கழகம்
.


நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com