Sunday, August 24, 2014



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

மெளனப் போராட்டம்

ISBN 978-981-09-1444-8

கவிதைத் தொகுப்பு
கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு
சிங்கப்பூர்

96 பக்கங்கள்
விலை ரூ. 75 / -




மெளனப் போராட்டம் என்ற இந்நூல் கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு அவர்களின் இரண்டாவது கவிதை நூலாகும். இவரது கவிதைகள் சிங்கப்பூரில் வெளிவரும் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. கப்பல் கட்டுமானப் படிப்பை முடித்து, அப்பணியிலும் நுட்பமாகவும், நுணுக்கமாகவும் செயலாற்றியமைக்காகப் பாராட்டுதலையும், பரிசையும் பெற்றுள்ளார். சாதி, மதம் அரசியல் என்ற பிரிவுகளையெல்லாம் தாண்டி, மனிதகுல ஒற்றுமையை – சகோதரத்துவத்தை தனது கவிதைகளில் வலியுறுத்தியுள்ளார்.

த. ஸ்டாலின் குணசேகரன்
வாழ்த்துரையில்...

சீர்காழியார் ஒரு கவிஞர் என்ற எல்லைக்குள் அடங்குபவர் அல்ல. வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்காக உதவிவரும் தயாள மனம் படைத்தவர். தன் தேசத்தின் பெருமையைப் போற்றும் பண்பினர். முன்னாள் இராணுவ வீரர். எந்த தமிழ் மொழி விழா என்றாலும் அதற்கு முன்னின்று உதவும் மொழிப்பற்றாளர். கப்பல் கட்டுமானத் துறையில் சிறந்த பொறியாளராக விளங்கி வருபவர். இப்படி பன்முகத் தன்மை கொண்டு விளங்கிவரும் அவர், தம் சிறந்த சிந்தனைகளை கவிதையாக வடித்து சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார்.

Dr. க. இராசகோபாலன்
அணிந்துரையில்...

தனது முதல் நூலாக கல்வியில் சிறந்து கலங்கரை விளக்காய் மின்னிடு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து தற்போது மெளனப் போராட்டம் நூலினை வெளியிட்டு தமிழ்க்கவியுலகில் தனக்கெனத் தனியிடம் பெற்று, தமிழால் தனக்கும், தன்னால் தமிழுக்கும் சிறப்பு சேர்க்க முனைகிறார்.

வாசகன் பதிப்பகம்.
பதிப்புரையில்...

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com