Saturday, July 12, 2014

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

நெஞ்சுக்குள் நெருப்பு

ISBN 978-93-83188-08-6

கவிதைத் தொகுப்பு
கவிஞர் தங்கராஜீ

96 பக்கங்கள்
விலை ரூ. 60 /-


சமூகத்தின் மீதான கோபம், கனன்று கொண்டிருக்கும் செந்தணலாக உருப்பெற்று, எல்லாம் மாறும் எனும் நம்பிக்கையை கவிஞனின் இதயத்தில் ஏற்படுத்திம் அந்த நம்பிக்கையை தன்னைச் சுற்றியுள்ள மனித மன்ங்களில் விதைக்க முற்படும். அத்தகு நல்லதொரு நம்பிக்கையை நம்முள்ளும் விதைக்கிறது கவிஞர் க. தங்கராஜீ அவர்களின் நெஞ்சுக்குள் நெருப்பு.

-    வாசகன் பதிப்பகத்தார்

பதிப்புரையில்

கட்டிடக் கலைஞரான க. தங்கராஜீ ஒரு கவிதைக் கலைஞராக வலம்வரத் தொடங்கியுள்ளார். என் மனச்சாரல் தொகுப்பினைத் தொடர்ந்து அவரின் கவிதை ஆர்வம் அணையாமல் இருக்கிறது என்பதை நெஞ்சுக்குள் நெருப்பு சான்றாக உள்ளது.

-    கவிஞர் பொன்.குமார்

நூலின் அணிந்துரையில்...

தேர்ந்த கவிஞருக்குரிய விரிந்த பார்வை, தீர்வு சொல்லும் விவேக சிந்தனை, தவழ்ந்து வரும் கங்கையென வற்றாத கற்பனை, திகட்டாத சுவை சொட்டும் கவிதைத் தேனடை! செங்கல் அடுக்கிச் சுவர் செய்யும் கைகள் சொல்லடுக்கி கவிதை செய்து சொக்க வைக்கின்றன.

ஆசிரியர் சி. மெய்யழகன்

நூலின் வாழ்த்துரையில்...


வாழ்தலின் எதார்த்தத்தை உணர்த்தும் கவிதைகளோடு மலர்ந்திருக்கும் “நெஞ்சுக்குள் நெருப்பு” கவிஞர் தங்கராஜ் அவர்களை சாதனை முகட்டில் ஏற்றி அழகு பார்க்கும். அரவணைக்கும் அத்தனை இதயங்களும் இவரின் சாதனைகளில் அகம் மகிழும்.
-    கவிஞர் ச. கோபிநாத்

நூலின் வாழ்த்துரையில்...


சமூக அவலங்களை வேரறுக்க ஒரு கிராமத்து இளைஞனாய், கட்டிடக் கலைஞனாய், சீர்திருத்தக் கவிஞனாய் கவிதைப் போர் தொடுத்துள்ளார் கவிஞர் க. தங்கராஜீ.

-    ஆசிரியர் வெ. தங்கதுரை

நூலின் வாழ்த்துரையில்...



நூல் தேவைக்கு


கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment