Thursday, January 27, 2011


"செந்தமிழே வணக்கம்" - செவ்வியல் பண்புகளை தன்னகத்தே கொண்டு எக்காலமும் இளமையோடும் செறிவோடும் திகழும் தமிழ் மொழியின் சிறப்புகளை நமக்குணர்த்தும் நல்ல நூல். செம்மொழி மாநாடு நடத்தி மொழியை சிறப்பித்திருக்கும் நாம் நிச்சயம் படிக்க வேண்டிய கையடக்க நூல்.

பக்கங்கள் 40
விலை ரூ. 8 /-

-தொழிலதிபர் ஏ.கே. லிங்கவேலு


"பெண்மையை போற்றுவோம்"-மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமாகவும் மூலசக்தியாகவும் விளங்கும் பெண்களின் புனிதத்தையும் அவர்க்ளின் இன்றைய நிலையையும் உணர்வுப்பூர்வமாக படம்பிடித்துக் காட்டும் கையடக்க நூல். பெண்களின் மீதான மரியாதை உயர்த்தும் கவிஞரின் முயற்சி வாழ்த்துக்குரியது.

பக்கங்கள் 40
விலை ரூ. 8 / -

-கவிஞர் ச. கோபிநாத்