Monday, December 29, 2014

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

நம்பிக்கை போதிமரம்

ISBN 978-93-83188-17-8

சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பு
க. சிவராஜ்

96 பக்கங்கள்
விலை ரூ. 60 /-




“தூங்கா விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல, இன்றைய தலைமுறை தன்னுள் உயிர்த்திருக்கிற தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள பல வழிகளை நாடுகிறாது. அவற்றில் முக்கியமானது வாசிப்பு....

தத்தம் இளமைக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்களே.... இந்த உணமையை வளரும் படைப்பாளரான திரு.க. சிவராஜ் அவர்களின் முதல் நூலான நம்பிக்கை போதிமரம் அழகுற எடுத்துச் சொல்கிறது.

நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் பொதிந்திருக்கிற நம்பிக்கை தீபம் வாசகர்களுக்கும் சுடர்விடத் தூண்டுகிறாது... வென்றவர்களின் வரலாறுகள், பொன்மொழிகள், சாதனையாளர்களின் படங்கள் போன்றவை கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவும், வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் தூண்டுவிக்கின்றன....”

-    பதிப்புரையில்...
வாசகன் பதிப்பகத்தார்


விவேகானந்தர், இராமகிருஷ்ணர், புத்தர், நேரு, காமராசர், ரூசோ, பெர்னார்ட்ஷா, சாக்ரடீஸ், அப்துல்கலாம், அன்னை தெரசா போன்ற சான்றோர்களின் அரிய கருத்துகளை நூலில் ஆங்காங்கே எடுத்துக் கூறியுள்ள விதம் க.சிவராஜின் ஆழ்ந்த சிந்தனைத் திறனை புலப்படுத்துகிறது.

-    அணிந்துரையில்
பேராசிரியர். முனைவர் தி. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் - 636011


சிறந்த நூலுக்கான அடையாளமாக பலரும் செல்லும் தகுதிகள்.... இடைவிடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தல் மீண்டும் மீண்டும் பலமுறை படித்தல், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருதல்.

இவை அத்தனையும் பொருந்திவரும் நூலாக இருக்கிறது இந்த நம்பிக்கை போதிமரம். பல்வேறு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியாளனாக வலம்வரும் அன்புமாணவரின் மற்றொரு முகம் இந்த நூலின் மூலம் வெளிவந்துள்ளது.

-    வாழ்த்துரையில்
பேராசிரியர். முனைவர் நா. சங்கரராமன்
தமிழ்த்துறை
எம்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
குமாரபாளையம், நாமக்கல்

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment