Sunday, February 3, 2013


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
கவித்தென்றல்
கவிஞர் பி. மாரியம்மாள்

விலை ரூ. 30 -

“கவிதைகளின் நயமும், வார்த்தைகளின் நேர்த்தியும், கருத்தாழமும் இவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவிருப்பதை பறைசாற்றுகின்றன.

முதல் நூலிலேயே பக்குவப்பட்ட கவிதைகள் தென்படுவது நிச்சயம் வாசகர்களுக்கு நிறைவயளிக்கும்.”

-    வாசகன் பதிப்பக பதிப்பாசிரியர்
பதிப்புரையில்

“கவிஞர் பி. மாரியம்மாளின் அனைத்து கவிதைகளிலும் சமுதாய சிந்தனைகளையும் இயற்கையின் பெருமைகளையும் இணைத்து படைத்துள்ளார். இளம் கவிஞர் வெளியிடும் இக்கவிதைகள் பயில்வோர் அனைவருக்கும் கவி ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. இவரது படைப்பின் முதல்படியான இந்த புத்தகமே அருமையாகவும் பெருமை கொண்டதாகவும் உள்ளது.”

-    முனைவர் எஸ். சுமதி
அமர்சேவா சங்க செயற்குழு உறுப்பினர்
நூலின் அணிந்துரையில்

“முதல் தொகுப்பிலேயே நம்பிக்கையூட்டக்கூடிய நல்ல கவிதைகளைத் தந்துள்ளார். இந்த நம்பிக்கை, கவிதைகளின் மீது மட்டுமல்லாமல், அவரும் சிறந்ததொரு கவிஞராக பரிணமிப்பார் என்பதற்கும் சேர்த்தும்தான்.

மாரியம்மாளின் பெரும்பாலான கவிதைகளில் தன்னம்பிக்கைச் சுடர் பிரகாசமாக ஒளியினை வீசுகிறது. அந்த ஒளி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான தீபச்சுடர்.”

-    கவிஞர் சூர்யநிலா
நூலின் அணிந்துரையில்
நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment