Friday, March 15, 2013




நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

அவள் வரும் நேரம்…

கவிதைத் தொகுப்பு
அன்பு முருகசாமி. லி

64 பக்கங்கள்
விலை ரூ. 40 / -

ஒவ்வொரு அணுக்களிலும் காதலினைச்
சுமந்திருக்கும் ஒரு காதலனின்
கவிதை வரிகளைச் சொல்லவா வேண்டும்?
கவிதையின் ஒவ்வொரு எழுத்தும்….
திகட்டத் திகட்ட தித்தித்தபடி…
காதலில் திளைத்து காத்திருக்கின்றான…
உங்கள் கைவிரலின் ஸ்பரிசத்துக்காக…
பக்கங்களை மெல்ல புரட்டுங்கள்…
பொங்கி வரும் காதல் வெள்ளத்தில்…
நீங்கள் காணாமலே போய்விடும் அபாயமுண்டு…
இந்தக் கவிஞனுக்குள்…
காதல் கூடுகட்டிப் பூத்திருக்கிறது.

வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்…

அன்பு முருகசாமி.. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடி மகிழும் ஓர் அற்புத மனிதன்.

“அவள் வரும் நேரம்….“ நூலை காதலோடு வாசித்தேன். புரட்டப் புரட்டத்தான் தெரிந்தது, இது அவனது இன்னொரு பரிமாணாம் என்று. வாசிப்பவரது காதல் பருவத்தை உதட்டோரத்தில் மென் புன்னகையோடு நினைவுறுத்தும். நாமும் காதலித்துப் பார்ப்போமே என்ற எண்ணத்தை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். காதல் குறித்த வேதனையின் வெளிப்பாட்டைக் கூட இவன் பேனா மை மென்மையாகவே வரைகிறது.

அன்பு ராமகிருஷ்ணன்.சு
நூலின் அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment